Sunday 30 September 2012

வாராந்தர பயான் Ceramah Mingguan


வாராந்தர பயான் Ceramah Mingguan

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 29.09.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 29.09.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak


மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 30.09.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 30.09.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

Wednesday 26 September 2012

இன்னோசன்ஸ் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் - புதிய திரைப்படம்(?)


இன்னோசன்ஸ் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் - புதிய திரைப்படம்(?)

பெற்ற தந்தையோடு குடும்பம் நடத்திய கிறித்தவப் பெண்ணின் அப்பாவித்தனம்!

onlinepj.com
    இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்)  என்ற பெயரில் முஸ்லிம்களின் மீது பொய்யையும், புரட்டையும் சொல்லி படம் எடுத்தவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டும் விதமாக, அவர்களது அப்பாவித்தனத்தை படம்பிடித்துக்காட்டும் விதமாக தற்போது பல சம்பவங்களை வல்ல இறைவன் நிகழ்த்திக் காட்டி வருகின்றான். அப்படி சென்ற வாரம் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு இங்கே தருகின்றோம். இதை  புதிய திரைப்படமாக கிறித்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் தயாரித்து வெளியிட்டால் அவருக்கு அமோக வரவேற்பு நிச்சயம்.
 கிறித்தவப் பெண்ணின் சோகக் கதை:
    அமெரிக்காவைச் சேர்ந்த கிறித்தவப் பெண், தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை, பல ஆண்டுகளுக்குப் பின், வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அவரது கதையை, "நியூயார்க் டெய்லி நியூஸ்' பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது
     அமெரிக்காவில், ஓகியோ மாகாணத்தில், டாயில்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த பெண்,வலேரி ஸ்புருல், வயது 60.
      பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திய பின், 1998ம் ஆண்டு இவரது கணவர் பெர்சி ஸ்புருல் எனபவர் காலமானார்.
     இந்நிலையில், அவரின் உறவினர் ஒருவர், தனக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவலை,வலேரியிடம் கூறினார். எளிதில் ஜீரணிக்க முடியாத வகையில், அவர் கூறிய விஷயத்தைக் கேட்டு நொந்து போனார் வலேரி.
    உன் கணவன்தான் உன்னைப் பெற்றெடுத்த தந்தை:
  வலேரியின் கணவனாக வாழ்க்கை நடத்திய பெர்சி ஸ்புருல்தான், வலேரியின் தந்தை என்பதுதான் அவர்கூறிய அதிர்ச்சி தகவல். இதை மரபணு சோதனை மூலம் உறுதி செய்து கொண்டார், வலேரி. அடுத்து என்னென்ன ரகசியங்கள் தன் வாழ்வில் புதையுண்டு கிடக்கிறது என்பதை, ஆராயத் துவங்கினார் வலேரி. அவருக்கு கிடைத்த தகவல்படி, வலேரியின் தாய் கிறிஸ்டி, விபசாரத் தொழிலில் ஈடுபட்டவர். பெர்சி ஸ்புருல் என்பவருடன் ஏற்பட்ட உறவில்,பிறந்தவர்தான் வலேரி. மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, அவரின் பாட்டி எடுத்து வளர்த்தார்; வலேரி தனது அம்மாவை பார்த்ததில்லை.
   இந்நிலையில் பெர்சி ஸ்புருல் என்ற ட்ரக் டிரைவரை வலேரி திருமணம் செய்து கொண்டார். மிஸிஸிபியில் பிறந்த பெர்சி ஸ்புருல், அக்ரான் என்ற ஊரில் டிரைவராக வேலை பார்த்தபோது,வலேரிக்கும், பெர்சி ஸ்புருலுக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம். 1998ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு தன்னுடைய 60 வயது வயதில் பெர்சி ஸ்புருல் இறந்துவிட்டார். அதன் பிறகுதான் வலேரிக்கு குடும்பக் குழப்பம் உருவாகியுள்ளது.
   தன்னுடைய தந்தை யாரென்ற சந்தேகத்துடன் இருந்த வலேரிக்கு திடீரென கணவர் பெர்சி ஸ்புருலின் மரபணுவை தன்னுடைய மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. பெர்சி ஸ்புருல் இறப்பதற்கு முன் சீவிவிட்டு வைத்திருந்த முடியை எடுத்து மரபணு சோதனைக்கு உட்படுத்தினார். அப்பொழுதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.
  தன்னுடைய கணவர்தான் தன்னைப் பெற்றெடுத்த தகப்பனார் என்று வலேரி தெரிந்து கொண்டார். இதை அவரது உறவுக்காரப் பெண்ணும் உண்மைப்படுத்த, மேலும் உறுதி செய்து கொண்டார் வலேரி. தனது தகப்பனார் யார் என்று தெரிந்து கொண்டதன் மூலம் நீண்டநாள் தேடலுக்கு விடை கிடைத்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வலேரி.
  ஆனால், தந்தை எனக் கூறி, அவரது வீட்டுக்கு அவ்வப்போது வந்து போனது, உண்மையில் வலேரியின் தாத்தா; அதாவது, பெர்சி ஸ்புருலின் தந்தை.
  கிறிஸ்டி என்ற பெண்மணிதான் பெர்சி ஸ்புருல் என்றவரோடு விபச்சாரத்தில் ஈடுபட்டு வலேரியை பெற்றெடுத்துள்ளார். வலேரியை பெற்றெடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணிடம் கொடுத்து வளர்க்க சொன்ன கிறிஸ்டிதான் தன் தாய் எனத் தெரியாமல், குடும்ப நண்பராக நினைத்து, வலேரி பழகி வந்தார். 1984ம் ஆண்டு கிறிஸ்டி இறந்து போனார். அது நாள் வரை அவர் யாரைத் தாய் என்று நினைத்திருந்தாரோ அவர் உண்மையான தாய் இல்லை, மாறாக, உறவினர் என்று அவர் கருதி வந்த கிறிஸ்டி என்பவர்தான் உண்மையான தாய் ஆவார்.
   அதேபோல அது நாள் வரை தனது தந்தை என்று கருதி வந்தவர் உண்மையில் அவருடைய தாத்தா ஆவார். அதை விடக் கொடுமை, அத்தனை காலமாக அவர் குடும்பம் நடத்தி வந்த கணவர்தான் உண்மையான தந்தை ஆவார். இதை டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளார் வெலரி.
   ஆண்டுகள் உருண்டோட, வளர்ந்து பெரியவளான பின், வலேரியை, அவர் தன் மகள் என்பதை அறியாமலே திருமணம் செய்து கொண்டார் பெர்சி ஸ்புருல்.
  கணவன் இறந்தபின், வலேரியின் வாழ்க்கையில் பல்வேறு ரகசிய முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து இருக்கின்றன. சில ஆண்டுகள் கழித்து, தற்போது, 60 வயது ஆன நிலையில்,தன் வாழ்க்கையின் உண்மைக்கதை உலகத்துக்கு தெரிய வேண்டும் என,வலேரி நினைத்தார்.. "கிறிஸ்டி மூலமாக என்னுடன் பிறந்த மற்ற சகோதர,சகோதரிகளுக்கும் இந்த உண்மை தெரிய வேண்டும் என, விரும்புகிறேன். என் வாழ்வில் நான் பட்ட  துயரம், யாருக்கும் நேரக்கூடாது' என,வலேரி கூறியுள்ளார்.
கட்டிய கணவனே தந்தை;
குடும்ப நண்பராக இருந்த பெண்ணே தாய்;
தந்தையாக இருந்தவர்தான் தாத்தா;
  இதுகுறித்து அவர் கூறுகையில், குடும்பத்தின் வரலாறு, பின்னணி, யார் யாருடைய பிள்ளைகள் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அது அவசியம். அதை மறைக்கக் கூடாது. எனக்கு இப்போது உண்மை தெரிந்து விட்டது. இதனால் பெரும் பாரம் நீங்கியுள்ளது. என்னைப் போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது பெரும் பாடமாக அமையும்.
  என்னால் இந்த அதிர்ச்சியைத் தாங்கும் வல்லமையை கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார் என்றார். தனக்கு ஏற்பட்ட இந்த சோகம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று வலேரி சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
  சென்ற வாரம் அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அங்குள்ள கிறித்தவர்கள் அனைவரும் இப்படித்தான் அப்பன் பெயர் தெரியாமல், பலரும் பலரோடு குடும்பம் நடத்தி வாழ்ந்து வருகின்றார்கள். இவற்றையெல்லாம் செய்ய இவர்களைத் தூண்டிவிடுவது இவர்கள் வேதமாக மதிக்கக்கூடிய பைபிள்தான் என்பதுதான் மிக கவலைக்குரிய ஒரு விஷயம்.
  இவர்களுக்கொன்றும் இது புதிய விஷயமல்ல:
   இப்படி மகளோடு உடலுறவு கொள்வது என்பது இவர்களுக்கொன்றும் புதிய விஷயமல்ல. தங்களது வேதத்தில் புனிதமிக்கவர்களாக கருதப்படும் தீர்க்கதரிசிகளே தங்களது மகள்களோடு உடலுறவு கொண்டு பிள்ளை பெற்றிருக்கும்போது, தேவனுடைய ஆசியை நாமும் பெற வேண்டும் என்றால், தீர்க்கதரிசிகள் செய்தது போல நாமும் நம்மை பெற்ற மகள்களோடு உடலுறவு கொண்டால்தான் கர்த்தருடைய ஆசியும்(?), அன்பும்(?) நமக்குக்கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றார்கள்.
  (குறிப்பு: மகள்களோடு உடலுறவு கொண்ட தீர்க்கதரிசியின் இந்த அற்புத(?) வரலாறை அறிய பார்க்க: ஆதியாகமம் 19:30 முதல் 36 வரை உள்ள வசனங்கள்)
 வலேரி ஸ்புருல்லின் கணவருக்கு வலேரிதான் நமக்குப்பிறந்த குழந்தை என்று தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. முன்பே தெரிந்திருந்த போதும் பைபிள் மகள்களோடு உடலுறவு கொள்வதைத்தான் அனுமதிகின்றதே என்ற அடிப்படையில் அவர் தனது மகளோடு வாழ்க்கை நடத்தியிருந்திருப்பார். தீர்க்கதரிசிகள் செய்த செயலை நாமும் செய்வதுதானே சரியானதாக இருக்கும் என்ற அப்பாவித்தனமாக கிறித்தவர்கள் நம்பி ஏமாறுவதால்தான் வலேரி போன்ற பல பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

விபச்சாரம் செய்தால்தான் தேவனின் ஆசி கிடைக்கும்:
   வலேரியின் தாய் கிறிஸ்டி விபச்சாரம் செய்தது சரியா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி எங்களுக்கு கேட்கின்றது. தேவனுடைய ஆசியை பெற்ற தீர்க்கதரிசிகள் அனைவருமே விபச்சாரம் செய்யாமல் இருந்ததில்லை என்பதுதான் பைபிள் காட்டும் உன்னத(?) வழி முறை.
    தீர்க்கதரிசியாக ஒருவரை தேவன் தேர்வு செய்யவேண்டுமானால் அவர் விபச்சாரம் செய்திருக்க வேண்டும் என்கின்ற அளவுக்கும், குறைந்தபட்சம் தீர்க்கதரிசியாக தேர்வு செய்யப்படக்கூடிய நபர் விபச்சார சந்ததியிலாவது பிறந்திருக்க வேண்டும் என்பதும்தான்  பைபிளில் தீர்க்கதரிசிக்கு உரிய சொல்லப்படாத, எழுதப்படாத தகுதிகள். அதனால்தான் அவர்கள் கடவுளாக மதிக்கக்கூடிய இயேசுவைக் கூட விபச்சார சந்ததியில் பிறந்தவராக பைபிள் கூறிக்காட்டுகின்றது. இயேசுவின் பாட்டி தாமார் என்பவர் செய்த விபச்சாரத்தை பைபிள் அழகாக வர்ணிக்கின்றது.
   (குறிப்பு: இந்த அற்புத(?) வரலாறை அறிய பார்க்க: ஆதியாகமம் 38:6  முதல் 24 வரை உள்ள வசனங்கள்)
  இவற்றிற்கெல்லாம் மேலாக புனித பவுல் என்பவர் கிறித்தவர்கள் அவர்கள் பெற்ற மகள்களுடனேயே விபச்சாரம் செய்யலாம் அது தவறில்லை. அது பாவமல்ல. பெற்ற மகளை தந்தையே திருமணம் செய்து கொண்டு விபச்சாரம் செய்யலாம் என்று முதலாம் கொரிந்தியர் 7:36 வசனத்தில் லைசன்ஸ் வழங்கி ஆசி வழங்குகின்றார்.
·விபச்சாரம் செய்யாத தீர்க்கதரிசிகள் இல்லை
·விபச்சாரம் செய்தால்தான் தீர்க்கதரியாக ஆக முடியும்
·பெற்ற மகள்களுடனேயே விபச்சாரம் செய்த தீர்க்கதரிசிகள் உள்ளார்கள்
·பெற்ற மகளோடு விபச்சாரம் செய்வது பாவமல்ல என்று பவுல் சொல்லிவிட்டார்
  எனும்போது கிறித்தவர்கள் தங்கள் மகள்களோடு விபச்சாரம் செய்வதை தவறு என்று எப்படி கூற முடியும்?
  வேத வழிகாட்டுதலின் பிரகாரம் நடக்கும் கிறித்தவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக(?)
   இதையெல்லாம் வேத வழிகாட்டுதல் என்று நம்பித்தான், அப்பன் பெயர் தெரியாமல், பெற்ற அப்பனோடே குடும்பம் நடத்தி அதன் மூலம் பிள்ளை பெறும் கேவலங்கள் கிறித்தவர்கள் வாழ்வில் அரங்கேறி வருகின்றது. வேதமே இவர்களை வழிகெடுப்பதால் வேத வழியில் வழிகெடும் இவர்களின் அப்பாவித்தனத்தை இன்னோசன்ஸ் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் என்ற தலைப்பிட்டு வலேரியை கதாநாயகியாக்கி ஒரு சூப்பர் படம் எடுக்கச் சொல்லி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ்க்கு ஐடியா வழங்குகின்றோம்.
  விரைவில்  அந்த  புதிய  திரைப்படத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
   இப்படிப்பட்ட கேடுகெட்டவர்கள்தான் உத்தமத்தூதரை, ஒழுக்க சீலரை தரக்குறைவாக விமர்சித்து படம் எடுக்கின்றார்களாம். மானங்கெட்டவர்களே! நபிகளாரை இழிவுபடுத்தி பொய்யான கற்பனை கதைகளை எடுப்பதைவிட்டுவிட்டு, இதுபோல பைபிளில் உள்ள உண்மைக்கதைகளை எடுக்கும்படி அவருக்கு அறிவுரை கூறிக்கொள்கின்றோம்.