Saturday 23 June 2012

பாவியாக்கும் பராஅத் இரவு


பாவியாக்கும் பராஅத் இரவு
ரியாஸ் எம்..எஸ்.ஸி., அம்பாந்தோட்டை, இலங்கை
சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனேமறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும் பாத்திஹா ஓத முன்கூட்டியேஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.
இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள்போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள். அதன் மணமோ"ஆஹா  ஆஹா' வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டுவிடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள்ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில்இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.
தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள்பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம்.எதற்காக?
முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காக
இரண்டாவது யாசீன் கப்ராளி களுக்கு ஹதியாவாகவும், உயிர் நீடிப்பிற்காகவும்
மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.
அது மாத்திரமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு மாத்திரம் இரவு10 மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டதொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போச்சு, ஏழு வருடம் படித்த மார்க்கஅறிஞருக்கு?
அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100 ரக்அத்களாம்.வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள்குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப்புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாக கூறப் பட்டுள்ளது தான் வேடிக்கை.
பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்டதொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்டதொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை(தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
(இச்செய்தி ஷாபி மத்ஹபின் "இஆனதுல் தாலிபீன்' என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில்இருக்கின்றது)
மக்களிடம் அறிமுகமான ஷஃபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும்தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இதுசம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப் பட்டவைகளாகும்.
(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுத் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)
பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது(பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் "பஹ்ருர் ராஹிக்' என்ற புத்தகத்தில் 5ஆம்பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.
 மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்று வதில்லை? இவர்கள் குர்ஆன்,ஹதீஸையும்  பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப்போகிறார்களோ? அல்லாஹ் இவர்களை காப்பாற்றுவானாக! 


பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் "ஷஅபான் பாதியாகி விட்டால்நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)
ஏன் இந்தச் சிறப்பு?
அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஃபான் பிறை 15ல்வரும் பராஅத் இரவாம். அந்த இரவை புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களைஉருவாக்கி வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத்அறிஞர்கள்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்றுகருதியதால் தான். அது மாத்திரமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல்செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.
மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்தஅதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா?அவனால் குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப் பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள்செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள்அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.
பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பானவிளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில்சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப் பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.
முதல் ஆதாரம்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம்எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
(அல்குர்ஆன் 44:2-4)   
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது தான் இவர்களின்வாதம். திருக்குர்ஆனை பொறுத்தமட்டில் ஒரு வசனத்தின் விளக்கத்தை இன்னொரு வசனம் அல்லதுஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு        எது?என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.
(அல்குர்ஆன் 97:1)
அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமலான் மாதத்தில் தான்உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில்அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைத்துல்கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத்தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும்  வசனத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
இரண்டாம் ஆதாரம்
ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில்நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்புதேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன்.  சோதனைக்கு ஆளானோர்உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான்அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: இப்னுமாஜா 1378
இது ஆதாரபூர்வமான ஹதீஸல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் "இப்னு அபீ ஸப்ரா' என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல்வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.ஷஅபான் மாதம்  15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டுரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங் களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 670
இந்த ஹதீஸும் ஆதாரப் பூர்வமானது அல்ல என்பதே உண்மை.  இதில் அறிவிப்பாளர் தொடரில் வரும்யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் "உர்வா' விடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின்அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறியகருத்தை பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதிஇமாம் அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நான்காவது ஆதாரம்
 நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதை போன்று வேறு எந்த மாதத்திலும்நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள்அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். 
அறிவிப்பாளர்: அதாஹ் பின் யஸார்,
நூல்: முஸன்னப் இப்னு      அபீஷைபா 9764, ஃபலாயிலுர் ரமலான் - இப்னு அபித் துன்யா
இத்தொடரில் வரும் அதாஹ் பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்றதரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
ஐந்தாவது ஆதாரம்
 ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல்இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்குசொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார். 
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ
நூல்: ஃபலாயிலு ரமலான்- இப்னு அபித் துன்யா 9
 இத்தொடரில் வரும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்றதரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.           
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவேஇவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக்கவனத்தில் கொள்ள வேண்டும்.

நரகமே கூலி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில்இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம்நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள்எச்சரித்துள்ளார்கள்.
(நூல்: முஸ்லிம் 3243)
எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில்கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்றுசெய்தால் அது நிராகரிக்கப்படுவதோடு அதைச் செய்தவர் நரகத்தில் புகுவார். இது நபிகளாரின்எச்சரிக்கையாகும்.
மறுமையை நம்பியவர்களே! உங்களைப் பாவியாக்கும் பராஅத் இரவைத் தூக்கி எறிந்து விட்டுஇறைவனாலும் இறைத்தூதராலும் காட்டித் தரப்பட்ட தூய இஸ்லாத்தைப் பின்பற்ற எல்லாம் வல்லஇறைவன் நமக்குத் துணை புரிவானாக!

1 comment:

  1. ரியாஸ் மவ்லவி அவர்களே இப்பனியில் மெனமேலும் தொடருவதற்கு அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக...... ஆமீன்..... ஹம்பாந்தோட்டை ரிஸ்வார்

    ReplyDelete