Wednesday 6 June 2012

Venus transit-2012-june-5,6 வெள்ளி கோள் சூரியனைக் கடக்கும் நிகழ்வு


بسم الله الر حمن الر حيم

Venus transit-2012-june-5,6
வெள்ளி கோள் சூரியனைக் கடக்கும் நிகழ்வு

33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.21:33
41. வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.35:41

1. ஒவ்வொரு கோள்களும் அதற்குரிய orbit-வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.
2.அவ்வாறு சுற்றும் போது சூரியனும்-வெள்ளியும்-பூமியும் சந்திக்கும் அறிய நிகழ்வு ஏற்படுகிறது.
3.இதை சூரியனை வெள்ளி கடக்கும் நிகழ்வு-Venus transit என்று சொல்லப்படும்.
4.இந்த நிகழ்வு அறிய நிகழ்வாகும்.இதற்கு அடுத்து 2117 ஆம் ஆண்டில் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
5.இதற்கு முன் 1639,1761,1791,1814,1882 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளது.
6.சமீபமாக ஜூன்-8-2004  அன்று நடந்துள்ளது.
7.அமெரிக்கா போன்று நாடுகளில் 05.06 .12 அன்று சூரிய அஸ்தமனத்தின் போதும்,ஐரோப்பா நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் 06.06.12  அன்று சூரிய உதயத்தின் போதும் காண முடியும்.
8.இதன் மூலமாக கோள்களுடைய அளவையும்,தூரத்தையும் அளக்க முடியும்.
9.சூரியனைக் காட்டிலும் சிறிய கோளான வெள்ளி கடக்கும்போது ஒரு சிறிய பறவை வானில் பறக்கும் நிகழ்வு போல் சூரியனை வெள்ளி கடுக்கும் நிகழ்வை கான முடியும்.
10. சூரியனை வெள்ளி கடக்கும்போது சிறிய புள்ளிபோல் தென்படும்.
11. இந்த நிகழ்வை வெறும் கண்ணால் காண இயலாது.
12. பூமியிலிருந்து வெள்ளி 4.1 கோடி கி.மீ தூரம் கொண்டது.அதேபோல் வெள்ளியிலிருந்து-சூரியன் 10.82 கோடி கி.மீ தூரம் கொண்டது.
13. இந்த அற்புத நிகழ்வு வானத்திலுள்ள கோள்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல்லாஹ்வின் ஆற்றலை உணர்த்துகிறது.
14. வானங்களையும்,பூமியையும், பூமியும் இவ்வளவு விசாலமாக படைத்த அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்ள அற்புதமான நிகழ்வு இது.
15.இந்த நிகழ்வை NASA நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


june 2012 ல் எடுக்கப்பட்ட வீடியோ
http://www.youtube.com/watch?v=EmKO2Ef3fiA
http://www.youtube.com/watch?v=w0FiIJ5cnzw
http://www.youtube.com/watch?v=Np8pkN3okLc&feature=related
http://www.youtube.com/watch?v=9iDjo9D4t78&feature=related
http://www.youtube.com/watch?v=5W3Wz9q1PUg
http://www.youtube.com/watch?v=xoxIdXpJ3vo
 "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். 31:25

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்'' என்று அவர் கூறினார். 21:56

"என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!'' (என்றும் கூறினார்) 12:101







No comments:

Post a Comment