Wednesday 2 January 2013

பினாங்கு-மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 29.12.2012 அன்று கொம்தார் அரங்கத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் தலைமை தாங்கினார்.மலேசியா மண்டல பேச்சாளர் யாசர் அரபாத் அவர்கள் தவ்ஹீத் வாதியின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு TNTJ மாநில பொது செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடியுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உலகம் திரும்பிப் பார்த்த உன்னத மார்க்கம் என்ற தலைப்பில் 50 DVD கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment