gold mine
بسم الله
الر حمن الر حيم
பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச்
செல்ல இயலாது.
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ
وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا (37)17
37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! 17:37
இந்த வசனம் குர்ஆன் இறைவேதம் தான் என்பதை
எப்படி நிரூபிக்கிறது என்பதை காண்போம்.
1. ஆகாயத்தில் பயணம் செய்து போவதை பற்றி குர்ஆன் 55:33 வசனத்தில் ஆற்றல் (power) இருந்தால் செல்லலாம் என்கிறது.
2. அந்த அடிப்படையில் பல ஆயிரம் கிலோமீட்டர் சென்று
வருகிறார்கள். (சுற்றுலா கூட செல்கிறார்கள்.)
3. இதைப் பற்றிய விஞ்ஞானம் இல்லாத காலத்திலேயே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருப்பது
குர்ஆன் இறைவனுடைய வேதம்தான் என்பதை நிரூபிக்கறது.
4. இப்படி ஆகாயத்தில் செல்ல முடியும் என்று சொல்லக்கூடிய
குர்ஆன் பூமிக்கு அடியில் மலை உயரம் கூட செல்ல முடியாது என்று மனிதர்களை பார்த்து
சவால் விடுகிறது.
5. இந்த சவாலை முறியடித்து மனிதர்கள் குர்ஆன் இறைவேதம் இல்லை
என்று நிரூபித்தார்களா? அல்லது குர்ஆன் இறைவேதம்தான் என்பதை நிரூபிக்கிறதா? என்று பார்ப்போம்.
6. உலகிலேயே மிக உயர்ந்த மலையை எடுத்துக்கொள்வோம். Mount Everest 8.48 km
உயரம் கொண்டது.
7. மனிதன் இந்த மலை அளவு பூமிக்கு அடியில் சென்றால் குர்ஆன்
இறை வேதமில்லை என்று நிரூபிக்க முடியும்.
8. ஆனால் மனிதன் பூமிக்கு அடியில் ஆழமாக சென்ற அளவு எவ்வளவு
தெரியுமா? South
Africa வில் உள்ள tautona என்ற தங்கச்சுரங்கத்தில் 3.9 km தான்.
9. இறைவனுடைய சவாலில் பாதி அளவு கூட மனிதனால் செல்ல
முடியவில்லை.
10. உலகிலேயே உயரத்தில் 110வது இடத்தில்
உள்ள lupghar
sar என்ற மலையின் உயரமான 7.2 kmய் கூட மனிதனால் கடக்க முடியவில்லை.
11. இதற்குக் காரணம் என்ன வென்றால் பூமிக்கு அடியில் 57c வெப்பம் இருக்கிறது. இதனால் மனிதன் இறந்து போகிறான்.
12. South Africa வில் உள்ள gold mine
(தங்கச் சுரங்கத்தில்) ஆண்டுக்கு பல நூறு நபர்கள் இறந்து போவதாக ஆய்வுகள்
சொல்கிறது.
13. அல்லாஹ்வின் ஆற்றலை பாருங்கள் சிறுவர்களும்,சிறுமிகளும்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கிறார்கள்.ஆனால் பூமிக்கு கீழ் யாராலும் செல்ல
முடிவதில்லை.
14.குர்ஆன் கடவுளின் வார்த்தை இல்லை என்று கூருபவர்களால்
இப்படி ஒரு சாதனையை செய்ய முடியவில்லை.
15. நிச்சயமாக பூமிக்கு மேல் உள்ள வெப்பம் எவ்வளவு, கீழ் உள்ள
வெப்பம் எவ்வளவு என்று அறிந்திராத முஹம்மது(ஸல்) அவர்களால் இந்த வசனத்தை சுயமாக சொல்ல இயலாது.
16. எவரெஸ்ட் சிகரத்தைப் பற்றியும், அதன் உயரம் பற்றியும்
அறிந்திடாத முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சொந்தமாக இந்த கருத்தை சொல்ல இயலாது.
17. எனவே எவராலும் முறியடிக்க முடியாத சவாலை சொல்லி
திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதை இந்த வசனத்தின் மூலம் நிரூபணமாகிறது.
By yasar arafath D.I.SC
|
No comments:
Post a Comment