Tuesday 4 December 2012

மனித நேயப்பணி



அஸ்ஸலாமு அலைக்கும்
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தை சார்ந்த  சதக்கத்துல்லா என்ற 35 வயது நபர் மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் கடந்த 12.11.2012 அன்று விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் அப்துர் ரஜ்ஜாக் பாய் அவர்களும் ரியாத் மண்டலத்தை சார்ந்த தவ்ஹீத் சகோதரர்களும் மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவருக்கு மலேசியாவில் உறவினர்கள் யாரும் இல்லாததால் நம்முடைய  ஜமாஅத் அவருடைய உடலை அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டனர்.மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பினாங்கு கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இது குறித்த விவரங்களை தெரிவித்தனர்.சதக்கத்துல்லா  அவர்களுடைய மரணம் சம்மந்தாமாக தேவைப்படும் ஆவணங்கள் அவருடைய ஊரிலிருந்து பெறப்பட்டது.பிறகு அவருடைய ஜனாஸா கடந்த 01.12.2012 அன்று பினாங்கு நிர்வாகிகளால் நபிவழியில் அடக்கம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். மரணமடைந்தவரின் மைத்துனர் மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.  

No comments:

Post a Comment